'உதயநிதியை துணை முதல்வராக்குவதே திமுகவின் குறிக்கோள்' - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

திருப்பூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். போதைப்பொருள் பிரச்சினை, நாய்களின் தொல்லை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தொட்டிபாளையத்தில் பாஜக காங்கேயம் தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.



கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் போதைப்பொருள் பிரச்சினை மிகவும் தீவிரமாக உள்ளதாகவும், இது குறித்து தான் மாநாடு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். "பள்ளியில் வகுப்பு ஆசிரியர் மாணவியை போதைப் பொருட்கள் பயன்படுத்த அழைக்கின்றார். மாணவர்கள் அதிகப்படியானோர் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். மிகவும் அபாயகரமான ஒரு சூழ்நிலையை தமிழகம் சென்று கொண்டுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாய்களின் தொல்லை குறித்தும் தமிழிசை கவலை தெரிவித்தார். "நாய்களினால் ஆடுகள் கடிக்கப்படுவது அதிகமாக இந்த பகுதியில ஆடு வளர்க்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசாங்கம் நாய்களை கட்டுப்படுத்த ஒரு நல்ல திட்டத்தை கொண்டு வர வேண்டும்," என்றார்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய தமிழிசை, "பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் நல்ல திட்டங்களை எல்லாம் மாநில அரசு சரியாக எடுத்துச் செல்வதில்லை. மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள் என்பதற்காகவே மாநில அரசு பாராபட்சமாக நடந்து கொள்கின்றது," என்று குற்றம்சாட்டினார்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த தமிழிசை, "அவர்களுடைய ஒரே சிந்தனை உதயநிதி தான் தமிழகத்தில் துணைமுதல்வர் ஆக்குவது. போதைப்பொருட்கள் அதிகமாயிருச்சு சட்ட ஒழுங்கு கிடையாது, திருட்டு அதிகமாகிவிட்டது. முதலில் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துங்கள் அதுக்கப்புறம் மற்றவை பாருங்கள்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...