பொள்ளாச்சியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை கொண்டாடிய திமுகவினர்

பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திமுகவினர் சிறப்பு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.



கோவை: பழனி முருகன் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திமுகவினர் சிறப்பு அன்னதானம் வழங்கினர்.



கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



முதலில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.



இந்த நிகழ்வு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.



நிகழ்ச்சியில் கழக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பணப்பட்டி தினகரன், நகர மன்ற துணைத் தலைவர் கௌதமன், திமுக செயற்குழு உறுப்பினர் அமுத பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் ஆறுபடை வீடு முருகன் பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...