கோவை நஞ்சப்பா சாலையில் இளம்பெண் ஓட்டிய மின்சார ஸ்கூட்டர் மோதி முதியவர் உயிரிழப்பு

கோவை நஞ்சப்பா சாலையில் நடந்து சென்ற 71 வயது முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். 19 வயது இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நஞ்சப்பா சாலையில் நேற்று (செப்டம்பர் 19) நடந்து சென்ற முதியவர் மீது மின்சார ஸ்கூட்டர் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (71) என்பவர் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென சுப்பிரமணி மீது மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக சுப்பிரமணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மின்சார ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் கோவை ராம்நகர் சாஸ்திரி ரோட்டைச் சேர்ந்த அஷ்விதா (19) என்ற இளம்பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அஷ்விதா மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...