கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம்

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு-கேரள எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இரு மாநில காவல் அதிகாரிகள் எல்லை தாண்டிய குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில காவல்துறையினரின் எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தகேயன் மற்றும் கேரளா காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்ப் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ஜுஜி, பாலக்காடு கலால் துறை ஆணையர் ராகேஷ், பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் இளமுருகன், அகலி துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையேயான குற்றவாளிகளின் செயல்பாடுகள், உளவுத்துறை தகவல்கள் பரிமாற்றம், லாட்டரி, பாலியல் தொழில், போலி மது, கஞ்சா, கனிமங்கள், மணல், மதிப்புமிக்க பொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், எல்லை சோதனைச் சாவடிகளின் செயல்பாடுகள், இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கிணைப்பது, NBW கைதிகளை கைது செய்தல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகிய விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டன.



சட்டவிரோத போக்குவரத்து, மருத்துவக் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகளை கொட்டுவதைத் தடுத்தல், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு போன்ற பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டன. இரு மாநில காவல் அதிகாரிகளும் எல்லை தாண்டி செயல்படும்போது எதிர்கொள்ளும் இடையூறுகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து, இரு மாநில காவல் கண்காணிப்பாளர்களும் பணியில் உள்ள இடையூறுகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...