கோவையில் தடையை மீறி பீடி, சிகரெட் விற்ற 4 வியாபாரிகள் கைது

கோவையில் பள்ளி, கல்லூரிகள் அருகில் பீடி, சிகரெட் விற்பனை தடை உத்தரவை மீறி விற்பனை செய்த 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனையில் 204 பாக்கெட் பீடி, சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை உக்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று (செப்டம்பர் 18) டவுன்ஹால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பி.எட் பெண்கள் பயிற்சி கல்லூரி எதிர்புறம் உள்ள ஒரு பெட்டிக்கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடையில் இருந்து 148 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அக்கடையின் உரிமையாளரான ஒண்டிப்புதூர் எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (60 வயது) கைது செய்யப்பட்டார்.

இதேபோல, சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள மற்றொரு பெட்டிக்கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்ததாக மசக்காளிபாளையம் வெள்ளத்துரை (42 வயது) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 12 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, உப்பிலிபாளையம் - காமராஜர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்ததாக மணிவாசகம் (74 வயது) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 21 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 23 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வரதராஜபுரம் பாலாஜி நகரைச் சேர்ந்த கனகராஜ் (70 வயது) கைது செய்யப்பட்டார்.

கல்வி நிறுவனங்கள் அருகில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நான்கு வியாபாரிகளும் சட்டத்தை மீறி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 204 பாக்கெட் பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...