பொள்ளாச்சி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: திருமங்கலம் பெண் தபால் ஊழியர் உயிரிழப்பு வழக்கில் உயர் அதிகாரியை கைது செய்யக் கோரிக்கை

பொள்ளாச்சி தபால் நிலைய ஊழியர்கள், திருமங்கலம் பெண் தபால் ஊழியர் உயிரிழப்பு வழக்கில் உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள தலைமை தபால் நிலைய ஊழியர்கள், திருமங்கலம் பகுதி பெண் தபால் ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் உயர் அதிகாரியை பணி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்த சுமதி என்பவருக்கு, அதே அலுவலகத்தில் பணியாற்றிய அஞ்சல் ஆய்வாளர் தீபராஜன் அதிக பணிச்சுமை கொடுத்ததாகவும், அவரது குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுமதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பாக அஞ்சலக ஆய்வாளர் தீபராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று கருதும் தபால் ஊழியர்கள், அவரை பணியிடை நீக்கம் செய்யவும், கைது செய்து தக்க தண்டனை வழங்கவும் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இறந்த பெண் அஞ்சலக ஊழியருக்கு நீதி கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தபால் ஊழியர்களுக்கும் அதிக இலக்கு நிர்ணயித்து அழுத்தம் கொடுப்பதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...