மேட்டுப்பாளையம் அருகே கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருட்டு: தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே புத்தர் நகரில் மதுரை வீரன் கோவிலுக்கு நேர்ந்த ஆடு திருடப்பட்டது. ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவல் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள புத்தர் நகர் ஆதி திராவிடர் மக்கள் குடியிருப்பு பகுதியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி சுமார் 80க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் கோவிலுக்கு ஒரு ஆட்டு கிடாயினை நேர்ந்து விட்டு, அதனை அனைவரும் ஒன்றினைந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், நேற்று இரவு ஊர் மக்கள் வளர்த்து வந்த கிடாயினை மர்மநபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ஆடு கிடைக்கவில்லை. இதனையடுத்து, காரமடை காவல்நிலையத்தில் ஊர் மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊர் மக்கள் சார்பில் காணாமல் போன ஆட்டின் புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஆடு திருடுபோனது குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊர் மக்கள் திருடப்பட்ட ஆட்டினை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...