கோவை N.G.G.O காலனியில் ரயில்வே மேம்பாலம்: மாற்றுப்பாதை குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை N.G.G.O காலனியில் 1 கிலோமீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சி, N.G.G.O காலனி ரயில்வே கேட் பகுதியில் 1 கிலோமீட்டர் நீள ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் பணி தொடங்குவதை முன்னிட்டு, அப்பகுதியில் ரயில்வே துறை, போக்குவரத்துத்துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.



N.G.G.O காலனியில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து இடிகரை வழியாக கோவில்பாளையம் சென்று சக்தி சாலையை அடையும் பாதையில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்த நிலையில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் 1 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. அக்டோபர் 1 முதல் பாலப் பணிகள் தொடங்கவுள்ளதால், அன்று முதல் ரயில்வே கேட் மூடப்படும்.



இதனை முன்னிட்டு, அதிகாரிகள் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அசோகபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டமும் நடைபெற்றது. இந்த ஆய்வில் மாவட்ட கவுன்சிலர் S.கார்த்திக், ஊராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர்கள் மாணிக்கம், கலாசாந்தாராம், வார்டு உறுப்பினர்கள் சுதாகர், ஶ்ரீராம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தரப்பில், மாற்றுப்பாதை குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அதிகாரிகள், தற்போது வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட் வழியாக செல்லும் மாற்றுப்பாதை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுப்பாதை குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...