அன்னூர் அருகே சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 154 மது பாட்டில்கள் பறிமுதல்

அன்னூர் அருகே பசூர் கிராமத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 154 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அன்னூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸ் குழுவினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, ஒரு தனியார் இடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பசூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்து மொத்தம் 154 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்று வந்ததாக தெரிய வந்துள்ளது.



கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் சதாசிவம் ஆகியோர் மீது அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...