கோவை மாநகராட்சி ஆணையாளர் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மதிய உணவை பரிசோதித்த ஆணையாளர், டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தை இன்று (18.09.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை உட்கொண்டு பரிசோதித்தார்.

மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் குழந்தைகளுக்கான வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து, அதே வார்டில் உள்ள டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வில் மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, துணை ஆட்சியர் (பயிற்சி) மது அபிநயா இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீ, சம்பத், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் ராஜேஸ்வேணுகோபால், ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...