உடுமலையில் அரசு விடுமுறையை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை: திருவிழா போல் குவிந்த குடிமகன்கள்

உடுமலையில் மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கள்ளச்சந்தையில் இருமடங்கு விலைக்கு மதுபானம் விற்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையம் அருகே பெரும் கூட்டம் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மிலாடி நபி அரசு விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடை எண் 2009-ல் உள்ள பாரில் அரசு மதுபானங்கள் இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டது.

மதுபானக் கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டதால் மதுபானம் தேடி அலைந்த மதுப்பிரியர்கள், மதுபானம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது தெரிந்து திருவிழா கூட்டம் போல் கூடினர்.



மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்ததாலும், ஒரே இடத்தில் ஏராளமான குடிமகன்கள் கூடியதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு மதுபானக் கடை திறந்திருந்தால் கூட இவ்வளவு நெரிசலைக் கண்டதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதால் குடிமகன்களின் தொல்லைகளே அதிகரிக்கிறது என்று மது விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்களும் அப்பகுதி வியாபாரிகளும் புலம்பினர்.

Newsletter

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...