மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்கு அருகிலுள்ள குட்டையில் முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் முதலைகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைகளை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டையில் உள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



குட்டையில் இரண்டு இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையில், அந்த தண்ணீரை பம்ப்செட் மோட்டார்கள் வைத்து வெளியேற்றி முதலைகளை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்துக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் முதலைகள் தென்பட்டதாக கூறப்படும் குட்டையை சுற்றி கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முதலைகள் வெளியேறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்றியவுடன் முதலைகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...