நாளை மிலாடி நபி பண்டிகை: தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் மூடப்படும்.


தமிழக அரசு, நாளை (செப்டம்பர் 17) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 4ஆம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தெரியாததால், தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், "செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, நாளை அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் ஆகியவை மூடப்படும். பொதுமக்கள் இந்த விடுமுறை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...