பத்திரிகை சுதந்திர தினம் இன்று...

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகை துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-ம் நாள் சர்வதேச பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அரசின் குறைகளையும் மற்றும் மக்களின் தேவைகளையும் எழுத்தின் மூலமாக சுட்டிக்காட்டி அதற்கான தீர்வை பெறுகின்ற உன்னத பணியை மேற்கொள்ளும் ஒருவரே உண்மையான பத்திரிகையாளராகிறார்.

அவ்வாறு பத்திரிகையாளர் ஒருவர் நிதர்சனங்களை எழுதும் பொழுது அவருக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் எழுவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் நாள் கொலம்பிய பத்திரிகையாளர் கிலேர்மோ கானோ இசாசா என்ற பத்திரிகையாளர் ஒருவர், அவரது அலுவலத்தின் முன்பு சமூக விரோதிகள் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்திற்கு பிறகே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் வலுப்பெற்றது.

பத்திர்கை சுதந்திரத்திற்காக போராடும் ஒவ்வொருவருக்கும் இந்நாளில் யுனெஸ்கோ சார்பில் கிலேர்மோ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. சுமார் 14 நபர்கள் கொண்ட குழு ஒன்றால் சிறந்த பத்திரகை சுதந்திர போராளி ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 25 டாலர் மதிப்புடைய பரிசு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மகராஷ்டிரா முன்னோடியாக திகழ்கிறது. அங்கு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களை பாதுக்காக்கும் விதமான இச்சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அனைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...