கோவை வடக்கு வட்டத்தில் செப்டம்பர் 18-ல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம்

கோவை வடக்கு வட்டத்தில் செப்டம்பர் 18-ல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிவார்கள். பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வாய்ப்பு.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செப்டம்பர் 12 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, கோவை வடக்கு வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் செப்டம்பர் 18 அன்று நடைபெற உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்நிலை தலைமை அலுவலர்கள் செப்டம்பர் 18 காலை 9 மணி முதல் செப்டம்பர் 19 காலை 9 மணி வரை கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிவார்கள்.

கோவை வடக்கு வட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் செப்டம்பர் 18 அன்று காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். இதில் கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அடங்கும்.

மேலும், கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கும் வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோவை வடக்கு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...