திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை கண்காட்சி தொடக்கம்

திருப்பூரில் சர்வதேச அளவிலான யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா, டைகெம் பிராசஸ் கண்காட்சிகள் தொடங்கின. 193 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா மற்றும் டைகெம் பிராசஸ் ஆகிய மூன்று கண்காட்சிகள் இன்று துவங்கியது. இந்த கண்காட்சிகள் திருப்பூர் பழங்கரையில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை இந்தியா நிட்பேர் அசோசியேசன் தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். இந்த நூலிழை கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.

பெல்ஜியம், கனடா, எகிப்து, சீனா, ஹாங்காங், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த நூலிழை தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் என 193 நூலிழை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த கண்காட்சியில் புதுமையான நூல், துணி ரகங்கள், டைஸ்கள், ஆஸிட், ஆடை அலங்கார பொருட்கள், இயற்கை ரகங்களான பருத்தி, பட்டு, கம்பளி ரகங்களும் செயற்கை நூலிழைகள், பிளண்டடு பாலியஸ்டர், ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும், பட்டன், ஜிப், லேஸ் உட்பட அனைத்து ஆடை தயாரிப்பு உபரி பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. 32-வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி, பின்னலாடை தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...