சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ-எம்) பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான சீதாராம் யெச்சூரி (72) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிபிஐ(எம்) பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த சீதாராம் யெச்சூரி, மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பை வகித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு மாதகாலமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.

சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, "சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று குறிப்பிட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நண்பர் சீதாராம் யெச்சூரி, நம் நாட்டைப் பற்றி ஆழமான புரிதல் கொண்டவர் மற்றும் இந்தியா என்ற சிந்தனையின் பாதுகாவலர்" என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தியை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக அவரைத் தெரியும். அவரின் மறைவு தேசிய அரசியலுக்கு பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய இடதுசாரி அரசியலுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...