கோவை வடகோவை திமுக அலுவலகத்தில் நாளை உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு

கோவை வடகோவை திமுக அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 12) காலை 9 மணிக்கு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை வடகோவை திமுக அலுவலகத்தில் நாளை (செப்டம்பர் 12) காலை 9 மணிக்கு கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுகவின் பவள விழா ஆண்டையொட்டி, புதிதாக உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு கட்சி தலைமையகத்தால் வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டைகள் பகுதி வாரியாக வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்வில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள பீளமேடு பகுதி கழகம்-1, பீளமேடு பகுதி கழகம்-2, பீளமேடு பகுதி கழகம்-3, சிங்காநல்லூர் பகுதி கழகம்-1, சிங்காநல்லூர் பகுதி கழகம்-2, சிங்காநல்லூர் பகுதி கழகம்-3 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

இது தொடர்பாக பகுதி கழக செயலாளர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர்கள் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என நா.கார்த்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...