கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்: மாவட்ட ஆட்சியர் உறுதி

கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார். சமத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.



இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை, வேளாண்துறை, இலவச வீட்டு மனை பட்டா, கூட்டுறவு கடன் சங்கம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 275 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, "கோவை மாவட்டத்தில் வேர் வாடல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு தமிழக முதல்வர் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதில் 13 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...