முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி போட்டிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போட்டிகள், கோவையில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியாக துவங்கியது.



இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 39,738 பேர் இப்போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 1,449, கல்லூரி மாணவர்கள் 16,809, பள்ளி மாணவர்கள் 18,679, பொதுப்பிரிவினர் 2,167, மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள்) 654 பேர் அடங்குவர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேரு விளையாட்டு அரங்கம், மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, குமரகுரு தொழில்நூட்ப கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கற்பகம் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தியாகி இராமசாமி நினைவு பள்ளி, இராமகிருஷ்ணா வித்யாலாயா பள்ளி ஆகிய 9 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். தனி விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும் மாநில போட்டிக்கு செல்வர். மாநில அளவிலான போட்டியில் முதல் இடத்திற்கு ரூ.1,00,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000 வழங்கப்படும். மொத்த பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...