பொள்ளாச்சி அருகே இரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் மற்றும் தேவனாம்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (செப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள இரண்டு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் நாளை (செப்டம்பர் 11) மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, மில் கோவில்பாளையம், முள்ளுபாடி, செங்குட்டைபாளையம், என்.ஜி புதூர், வடக்கிபாளையம், பெரும்பதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல், தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம், குளத்துப்பாளையம், சேரி பாளையம், ஆண்டிப்பாளையம், வகுதம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கப்பளாங்கரை ஒரு பகுதி, செரிபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின் தடை நாளை (செப்டம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மின்நுகர்வோர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...