மூன்று மணி நேரத்தில் வழிப்பறி வழக்கை கண்டுபிடித்த தடாகம் போலீசார்: வெளி மாநில சிறுவன் கைது

கோவை தடாகம் பகுதியில் 64 வயது பெண்ணின் 10 பவுன் தாலிக்கொடி திருடப்பட்டது. போலீசார் மூன்று மணி நேரத்தில் வழக்கை முடித்து, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை கைது செய்தனர்.



கோவை: கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னிமடை அருகே ஆர்.ஆர் அவென்யூ குடியிருப்பில் நடந்த வழிப்பறி சம்பவத்தை போலீசார் மூன்று மணி நேரத்தில் விரைந்து முடித்துள்ளனர்.

புதிதாக குடிவந்துள்ள சிவசங்கர் மற்றும் அவரது மனைவி பார்வதி (64) ஆகியோர் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பார்வதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு சஞ்சய் குமார் தப்பியோடினார்.

உடனடியாக தடாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விரைவான நடவடிக்கையின் மூலம், மூன்று மணி நேரத்திற்குள் சஞ்சய் குமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 10 பவுன் தாலிக்கொடியை மீட்டனர்.

இந்த சிறப்பான செயலுக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போலீஸ் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. பெயர் விலாசம் தெரியாத வெளி மாநில நபர்களை வேலைக்கு அமர்த்துவது ஆபத்தானது என்றும், அவ்வாறு அமர்த்தும் பட்சத்தில் அவர்களின் முறையான ஆவணங்களை பெற்று வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கண்காணிப்புக்காக சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...