யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளது - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோவையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்தார். யூடியூப் சேனல்களை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர உள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.





இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.



மலிவு விலை மருந்துகள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், மார்கெட் விலையை விட குறைவான விலைக்கு மருந்துகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் இது பயனுள்ள திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் PM-SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான ஒப்புதல் குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் இதுவரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை அனைத்து மக்களின் கருத்துகளையும் கேட்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆரம்பக் கல்வியில் தாய்மொழி கல்வியை வலியுறுத்துவதே இதன் நோக்கம் என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்துவோம் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் குறித்து பேசிய அமைச்சர், "மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லோரும் செய்தியாளர்களாக இருக்கின்றார்கள். யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற சூழல் இருந்து வருகிறது. இதனை முறைப்படுத்த புதிய பிராட்காஸ்டிங் மசோதா வர இருக்கிறது" என்றார்.

யூடியூப் சேனல்கள் மற்றும் இணைய ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அமைச்சர், தேசத்திற்கு எதிராக செயல்பட்ட 69 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர், விஜய்யின் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும், ஊடகங்களே இதனை பெரிதுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...