கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

கோவையில் செப்டம்பர் 9 அன்று விநаயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு செப்டம்பர் 9ஆம் தேதி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியின் போது நிறுவப்பட்ட சிலைகள், அடுத்த இரண்டு நாட்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதன்படி, செப்டம்பர் 9 அன்று மதியம் 1 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படும். மேலும், மதியம் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து தொடங்கும் மற்றொரு ஊர்வலம் குறிச்சி குளத்தில் முடிவடையும்.

போக்குவரத்து மாற்றங்கள்:

1. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக மாற்று வழியில் செல்ல வேண்டும்.

3. உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு வழியாக மாற்று பாதையில் செல்ல வேண்டும்.

4. உக்கடத்திலிருந்து குனியமுத்தூர் வழியாக பாலக்காடு செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.

5. பாலக்காடு சாலையிலிருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்களுக்கும் மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கவனத்தில் கொண்டு பயணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...