கோவை செட்டி வீதி அருகே இளைஞர் துரத்தி வெட்டிக் கொலை

கோவை செட்டி வீதி அருகே, மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கெம்பட்டி காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோகுல் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரிவாள் மற்றும் கட்டை பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டி வீதி அருகே இளைஞர் ஒருவர் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் (24) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

பாலாஜி அவென்யூ பகுதியில் கோகுலை எதிர்தரப்பு இளைஞர்கள் துரத்தியதாகவும், பின்னர் அரிவாளால் வெட்டியும் கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையில், ரத்தம் வடிந்தபடி ஓடி ஒளிந்த கோகுல் உயிரிழந்துள்ளார். சாலையில் தெரிந்த ரத்தத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...