வாட்ஸ்அப் குழு மூலம் வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு: 117 ஏஜென்ட்கள் கண்டுபிடிப்பு

கோவையில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய வழக்கில் வாட்ஸ்அப் குழு மூலம் செயல்பட்ட 117 ஏஜென்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, 15 வெளிநாட்டு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, கோவை தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வடக்கு காவல் துணை ஆணையர் ஸ்டாலின் கூறுகையில், "கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி 117 ஏஜென்ட்கள் மூலம் விபச்சார தொழில் செய்வது தெரியவந்தது. கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில், நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன," என்றார்.

மேலும் அவர், "ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப் குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து சிம் கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கபீர் சிங் என்பவரை தேடி வருவதாகவும், இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் துணை ஆணையர் ஸ்டாலின் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...