கோவையில் அதிவேக வாகனம் ஓட்டிய 17 பேர் மீது வழக்கு, 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 17 இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாநகரப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களை அதிகவேகமாக ஓட்டுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அவிநாசி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் போலீஸார் செப்டம்பர் 6 அன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த 17 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், "இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். கோவை மாநகரில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தனர்.

கோவை மாநகரில் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து, பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...