மேட்டுப்பாளையத்தில் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஏழு அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கனபதி ஹோமம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பொன்விழா நகர் பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, ஏழு அடி உயரமுள்ள விநாயகர் சிலை அலுவலகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதிகாலையில் கனபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



இந்த விழா நிகழ்ச்சிக்கு பா.ஜ.க நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவர் விக்னேஷ், முன்னாள் நகராட்சி தலைவர் சதீஷ், சிறுமுகை நகர தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...