விநாயகர் சதுர்த்தி: புலியகுளம் முந்தி விநாயகர் 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் காட்சி

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 40 கிலோ சந்தன காப்பு, 2 டன் மலர்களுடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார். பக்தர்கள் அதிகாலை முதல் வழிபாடு செய்கின்றனர்.



Coimbatore: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 40 கிலோ சந்தன காப்பு மற்றும் 2 டன் மலர்களுடன், ராஜ அலங்காரத்தில் காட்சியளிக்கும் முந்தி விநாயகரை அதிகாலை முதலே பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே மிக உயரமான விநாயகர் சிலைகளுள் ஒன்றான, பிரசித்தி பெற்ற கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. அதிகாலை 16 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேக பொருட்களால், விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். அதேபோல் இன்றைய தினம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.



கோவை மட்டுமின்றி அன்டை மாவட்ட பக்தர்களும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக கோவை புலியகுளம் விநாயகர் கோயிலுக்கு வந்து அதிகாலை முதலே பக்தியுடன் முந்தி விநாயகரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...