உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் பரப்புரை நடத்தியதாக, அதிமுக சார்பிலான வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.



தேர்தல் ஆணையம் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வெங்கடகிருஷ்ணா சாலையில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல், உடுமலை–பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரப்புரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை கண்டித்து, உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் ஸ்ரீ வத்சவாவிடம், திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆவின் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரன் தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் குழு புகார் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், உடுமலை பகுதியில் பரப்புரை நடத்த ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரச்சாரம் நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்தனர்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக பரப்புரை மேற்கொள்ளும் திமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடத்திலேயே பிரச்சாரம் நடத்தச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...