கோவை உக்கடம் மேம்பாலத்தின் சுங்கம் பைபாஸ் இணைப்பு ராம்ப்புகள் திங்கள்கிழமை திறப்பு

கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் M.K. Stalin கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.481.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 3.8 கிலோமீட்டர் நீள மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் சுங்கம் செல்வதற்கான ஏறு, இறங்குதளம் வாலாங்குளம் வழியே அமைக்கப்பட்டு வந்தது.



திறப்பு விழாவின் போது முழுமை அடையாமல் இருந்த இந்த இணைப்பு ராம்ப்புகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்திட திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது, சுங்கம் பைபாஸ் உடன் உக்கடம் மேம்பாலத்தை இணைக்கக்கூடிய ஏறுதளம், இறங்குதளத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ராம்ப்புகளில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய இணைப்பு ராம்ப்புகள் திறக்கப்படுவதால், உக்கடம் மேம்பாலத்தில் இருந்து சுங்கம் பைபாஸ் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...