மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்க ஏற்பாடுகள் தீவிரம்

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. பவானி ஆற்றில் சிலைகள் கரைக்க ஏதுவாக சகதிகள் அகற்றப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சிலைகள் பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் அருகே பவானி ஆற்றில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



தற்போது அந்த இடம் சகதியாக இருப்பதால், பாதுகாப்பு கருதியும் எளிதில் சிலைகளை கரைக்க ஏதுவாகவும் சகதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மூலம் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

சி டி சி டெப்போ முதல் சுப்பிரமணியர் கோவில் வரை சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த ஏற்பாடுகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...