கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 44-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 9 அன்று நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் 9,526 மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 09, 2024 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆர்.என்.ரவி தலைமையேற்கிறார். நலத்துறை அமைச்சரும், தமிழ்நாடு வேளாண்மை-உழவர் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறநல்கை பரிசுகளையும், பதக்கங்களையும் அறிவிக்கவுள்ளார்.

முனைவர் திரிலோச்சன் மஹாபத்ரா, தலைவர், பயிர் இரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்திய அரசு, புதுதில்லி மற்றும் முன்னாள் தலைமை இயக்குநர், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், புதுதில்லி அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றவுள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற உள்ளனர். இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும் (In person), உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் (In absentia) மூலமாகவும் பட்டங்களைப் பெற உள்ளார்கள்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...