சூலூர் அருகே பள்ளி மாணவரை கத்தியால் குத்தி கைபேசி பறித்த இருவர் கைது

சூலூர் அருகே டியூஷன் முடித்து வீடு திரும்பிய 14 வயது மாணவரை கத்தியால் குத்தி கைபேசி பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Coimbatore: சூலூர் அருகே பள்ளி மாணவர் ஒருவரை கத்தியால் குத்தி கைபேசியை பறித்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூலூர் அருகே வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டியூஷன் முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் வந்த மூன்று பேர் மாணவரை வழிமறித்து, அவரது கைபேசியை கேட்டுள்ளனர். மாணவர் மறுத்ததால், அவரை கத்தியால் குத்தி விட்டு கைபேசியை பறித்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த சூலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஆகஸ்ட் 31 அன்று ஐயப்பன் (29) மற்றும் தமிழ்ச்செல்வன் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...