கோவை பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகத்தின் 'நட்பு பாராட்டுவோம்' நிகழ்ச்சி

கோவை பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகம் சார்பில் 'நட்பு பாராட்டுவோம்' என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். சாதி, மத பேதமின்றி அனைவரும் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகம் சார்பில் 'நட்பு பாராட்டுவோம்' என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திராவிட நட்புக்கழகத்தின் தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அசன் முகம்மது முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திமுக பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் கலந்துக்கொண்டார்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவைத் தலைவரும், திராவிட நட்புக்கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக்குழுத் தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "சாதி மறுப்பாளர்கள், பெண் சமத்துவம் பேணுபவர்கள், எந்தவித மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் திராவிட நட்புக்கழகத்தில் இணைந்து செயல்படலாம்" என்று கூறினார்.



மேலும் அவர், "சாதிமதமற்ற, ஆண் பெண் சமநிலை பேணும் சமத்துவம், வெறுப்பு அரசியலை அகற்றி மதநல்லிணக்கம் பேணுதல், சமூக நீதியை நிலைநாட்டச் செயல்படவேண்டும்" என்று வலியுறுத்தினார். இளைஞர்களை நோக்கி, "சமூக வலைத்தளங்களில் முற்போக்குக் கருத்துகளைப் பதிவிட்டு உலகமெல்லாம் பரப்பவேண்டும். அதுவே தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த தற்போதைய காலத்தின் செயல்பாடாகும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மு.கனகராஜ், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.டி.கோபால்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திராவிட நட்புக்கழகம் மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயராணி செய்திருந்தார். மண்டல அமைப்பாளர் வழக்குரைஞர் முருகேசன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...