கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களிடமிருந்து 711 மனுக்கள் பெறப்பட்டன.



கோவை: தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆகஸ்ட் 31 அன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மேற்கு மண்டல போலீசாருக்கான குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை மாநகரம்-மாவட்டம், திருப்பூர் மாநகரம்-மாவட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினரிடமிருந்து பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை காவல் துறை தலைவர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சங்கர் ஜிவால் பேசுகையில், ஏற்கனவே இடமாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையிலும், இப்போது மனுக்கள் கொடுக்கும் போலீசாரின் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும் என்றார். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன் இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த முக்கிய கூட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் சரவணக்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...