கோவையில் ரூ.15.81 கோடி முதலீட்டு மோசடி: நிறுவன நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி 387 முதலீட்டாளர்களிடம் ரூ.15.81 கோடி பெற்று மோசடி செய்தது. நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை, காந்திபுரம் டாடாபாத் 7-வது வீதியில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை நம்பி ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், நிறுவனம் வாக்குறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்காமல் ஏமாற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் 2019-ஆம் ஆண்டு கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 387 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.15 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த குறிஞ்சி என்கிற குறிஞ்சிநாதன் (42) மற்றும் நிறுவன ஊழியர்களான கதிர்வேல், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற நான்கு ஊழியர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி, விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 387 முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்ததாக கருதப்படுகிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...