கோவையில் பாஜக இளைஞர் அணி செயலாளர் மீது கொலை முயற்சி தாக்குதல்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பாஜக இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தினர். காயமடைந்த சதீஷ்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த சதீஷ்குமார் உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (கங்கா) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்து கோவை மாவட்ட தெற்கு பாஜக தலைவர் வசந்த ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை எதிர்த்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...