'திறந்த வெளியில் குப்பை கொட்டப்படாத பேரூராட்சியாக பேரூர் மாறும்' - மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

கோவையில் பேரூர் பகுதியில் 'ஒருங்கிணைந்த திடக்கழிவு வளமீட்பு பூங்கா' திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி திறந்து வைத்து, பேரூர் திறந்தவெளி குப்பை கொட்டுதல் இல்லாத பேரூராட்சியாக மாறும் என்று தெரிவித்தார்.



கோவை: கோவை ராக் (RAAC) அமைப்பு தமிழக அரசுடன் இணைந்து பேரூர் பகுதியில் 'ஒருங்கிணைந்த திடக்கழிவு வளமீட்பு பூங்காவை' (Integrated Solid Waste Resources Recovery Park) நிறுவியுள்ளது. MILACRON நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த பூங்காவின் துவக்க விழா "தூய்மை மிகு பேரூர்" என்ற பெயரில் ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



மேலும், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பேரூர் பேரூராட்சித் தலைவர் அண்ணாதுரை மற்றும் MILACRON நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



இந்த பூங்காவில் மின்சாரத்தால் இயங்கும் குப்பை சேகரிப்பு வாகனங்கள், பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் இயந்திரம், உணவுக் கழிவு மற்றும் தாவர கழிவுகளை தூளாக்கும் இயந்திரம் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளன.



மாவட்ட ஆட்சியர் இந்த இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை பார்வையிட்டார்.



பூங்கா அமைப்பாளர்கள் பூங்காவின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.



நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, 21 வகையான கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட கோவையின் அடையாளமான மணிக்கூண்டின் மாதிரி (250 கிராம் எடை) மாவட்ட ஆட்சியருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பேசுகையில், "கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திடக்கழிவு மேலாண்மை ஒரு பெரும் சவாலாக உள்ளது. இதற்குத் தீர்வு காண பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பேரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கு 97 செண்ட் நிலம் மட்டுமே உள்ளது, அதிலும் பாதிக்கு மேல் பழைய குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இப்போது இந்தப் பூங்காவில் கோவையிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும். கோயில் விழாக்கள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மேலாண்மை செய்யவும், பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கி மறுசுழற்சி செய்து கட்டுமானப் பொருட்களாக மாற்றவும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்க மூன்று வாகனங்கள் பெறப்பட்டுள்ளன," என்று விளக்கினார்.

"கல்லூரி மாணவர்கள் மூலம் குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். திறந்த வெளியில் குப்பை கொட்டப்படாத பேரூராட்சியாக பேரூர் மாறும் என்று நம்புகிறோம்," என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...