கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி திமுக உறுப்பினர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பங்கேற்பு

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.



கோவை: கோவை துடியலூர் அருகே வடமதுரையில் உள்ள எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திமுக கோவை வடக்கு மாவட்டம் துடியலூர் பகுதி கழகம் சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. நாகராஜன், சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் மணிசுந்தர், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அமைப்பாளர் தியாகு, ஆதிதிராவிர அணி மாவட்ட அமைப்பாளர் தென்னை சிவா, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி பேசுகையில், "அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் உரிய பதில்கள் தலைமையிடமிருந்து கண்டிப்பாக கிடைக்கும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்று வெற்றி பெற்றது போல, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இக்கூட்டத்தில் பகுதி அவைத்தலைவர், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, மாவட்ட பிரதிநிதி தன்ராஜ் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...