கோவை குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு: அரசு உதவி கோரி அமைச்சர்களை சந்தித்த பெற்றோர்

கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு தேவைப்படுவதால், அரசின் உதவியை நாடி அமைச்சர்களை சந்தித்துள்ளனர். இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக ரூ.16 கோடி தேவைப்படுவதால், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொதுமக்களிடமிருந்து முடிந்தவரை உதவிகள் கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் R.முத்தரசன் அவர்களை கடந்த 21.08.2024 அன்று நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, முத்தரசன் சுகாதார அமைச்சரை 24.08.2024 அன்று நேரில் சந்தித்து விவரங்களைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர், குழந்தையை அழைத்து வந்து முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



இதே போல், இன்று கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சரையும் குழந்தையின் பெற்றோர் நேரில் சந்தித்துள்ளனர். மாவட்டப் பொறுப்பு அமைச்சர், இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைத்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் உதவியுடன் குழந்தைக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...