பொள்ளாச்சி அருகே திடீர் சூறாவளி: சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் திடீர் சூறாவளி காற்று வீசியது. மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று வீசியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது.

இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



ஆழியார் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மரம் விழுந்ததால், அந்த கார் முழுவதும் சேதமடைந்தது.



இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒரு மிகப்பெரிய ராட்சத மரம் விழுந்ததில் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால், வழக்கமாக பரபரப்பாக காணப்படும் ஆழியார்-வால்பாறை சாலை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சாலை முழுவதும் விழுந்த மரங்களும் மரக்கிளைகளும் சிதறிக் கிடக்கின்றன.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...