தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மாயம்..!

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 7 மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு மாதிரி பள்ளி மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் கீழ், குண்டடம் மாதிரி பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் சுதந்திர தின விழா விடுமுறையை கொண்டாட குளிக்கச் சென்றனர். இவர்களில் டேவிட், அசப் சாமுவேல், ஸ்டீவ் டேனியல், கலாப், டெவின் ரோஜர், நித்தீஸ் குமார் மற்றும் ஜெரோமியா ஆகியோர் அடங்குவர்.



எதிர்பாராத விதமாக, 16 வயதான ஜெரோமியா (ராஜகோபாலின் மகன்) என்ற மாணவன் மட்டும் நீரில் மூழ்கி காணாமல் போனார். மற்ற 6 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பாலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...