பொள்ளாச்சியில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் கைது

சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சியில் மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து டிராக்டர் பேரணி நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Coimbatore: பொள்ளாச்சியில் சுதந்திர தினத்தன்று மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் செய்ய முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் டிராக்டர் பேரணி நடத்தி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர்.



இந்நிலையில், பேரணி நடத்த கொண்டு வந்த டிராக்டர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் திடலில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட விவசாயிகள், "விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்த முயன்ற எங்களை போலீசார் அராஜகத்துடன் நடந்து கொண்டு கைது செய்வது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...