கோவையில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு அதிகரிப்பு

கோவையில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் உடல் பருமன் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



Coimbatore: கோவை வ.உ.சி மைதானத்தில் விஜிஎம் கேஸ்ட்ரோ மருத்துவமனை சார்பில் 4வது ஆண்டாக உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் மருத்துவர் வி.ஜி. மோகன்பிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து மாரத்தானை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் 3,200 பேர் பங்கேற்றனர். 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வீல்சேர் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆண்கள், பெண்கள் பங்கேற்று ஓடினர்.



மாரத்தான் போட்டி வளாகத்தில் மூத்த கேஸ்ட்ரோ என்டரால்ஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் மற்றும் ஆர்த்தோ மருத்துவர் சுமன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: "இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்சினை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது 11% முதல் 30% வரை அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தை விட நகர்ப்புறத்தினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்."

"துரித உணவு, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, உடற்பயிற்சியின்மை போன்ற நவீன வாழ்க்கை முறையால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். கொழுப்பு படிந்த கல்லீரல், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன," என்றனர்.



குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். "முன்பு ஒரு குழந்தை சிகிச்சைக்கு வந்தால், இப்போது ஐந்து குழந்தைகள் வருகின்றனர். உடற்பயிற்சி இன்மை, விளையாட்டு இல்லாமை, அதிக நேரம் செல்போன் பயன்பாடு போன்றவை காரணங்களாக உள்ளன," என்றனர்.

உடல் பருமனால் எலும்பு தேய்மானம், எலும்பு பலவீனம் ஏற்படுவதாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி, சத்தான உணவு அவசியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.



இந்த மாரத்தானில் மூத்த கேஸ்ட்ரோ மருத்துவர்கள் வி.ஜி. மோகன்பிரசாத், கோகுல் கிருபா சங்கர், ஆர்தோ மருத்துவர் சுமன், கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மதுரா சுமன், வம்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...