கோவை கார் குண்டு வெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அரபிக் கல்லூரி மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத அமைப்பில் சேர்த்தது அம்பலம்.


Coimbatore: கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே 2022 அக்டோபர் 23-ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபீன் (28) உயிரிழந்தார். இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த குற்றச்சாட்டில் 4 பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சையது அப்துல் ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோர் ஆவர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் மதப் போதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜமீல் பாஷா அதன் தலைமை ஆசிரியராக இருந்தார். இவர் மாவட்ட அளவில், அரபி மொழி மையங்களை பல்வேறு இடங்களில் தொடங்க அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில், முகமது உசேன், இர்ஷாத் ஆகியோர் கோவையில் இம்மையங்களை தொடங்கினர்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "இங்கு ஜமீல் பாஷாவின் பதிவு செய்யப்பட்ட உரைகள் ஒளிபரப்பப்பட்டன. சையது அப்துல் ரகுமானால் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்ட ஜமேஷா முபீன் கோவை கோட்டைமேட்டில் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்தினார்" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள்களைத் திரட்டியது, தீவிரவாத பயிற்சி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சையது அப்துல் ரகுமான், முகமது உசேன், இர்ஷாத், ஜமீல் பாஷா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...