திருப்பூரில் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


Coimbatore: திருப்பூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூர் மாநகர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



தொடர்ந்து, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களிலும் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் மற்றும் இலக்கியப் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து செயல்பட உறுதியேற்றனர் கட்சி நிர்வாகிகள்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...