கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஆறு மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தார்.

இந்த பிரச்சார வாகனங்கள் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை உபயோகப்படுத்துவோம்" என்ற முழக்கத்துடன் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.



இந்த பிரச்சார வாகனங்களில் சிறப்பு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டை மேலும் வலியுறுத்தும் வகையில், இந்த பிரச்சார வாகனங்கள் அனைத்தும் முழுவதும் மின்சார வாகனங்களாக உள்ளன.

பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு பதிலாக காகிதம் மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பிரச்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...