கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

கோவையில் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஆறு மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சு. முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடனிருந்தார்.

இந்த பிரச்சார வாகனங்கள் "பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" என்ற நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை உபயோகப்படுத்துவோம்" என்ற முழக்கத்துடன் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.



இந்த பிரச்சார வாகனங்களில் சிறப்பு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பொதுமக்களுக்கு நெகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டை மேலும் வலியுறுத்தும் வகையில், இந்த பிரச்சார வாகனங்கள் அனைத்தும் முழுவதும் மின்சார வாகனங்களாக உள்ளன.

பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு பதிலாக காகிதம் மற்றும் துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பிரச்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...