கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம்

கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அமைச்சர் மகேஷ், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை கந்தராபுரம் அருகே உள்ள எல்.ஐ.சி. காலனி பகுதியில் அமைந்துள்ள குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தனர். அதுமட்டுமின்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையத்திலும் மனு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி சாலையிலிருந்து குறிச்சிபுதூர் பகுதிக்கு செல்லும் சாலையின் துவக்கம் மற்றும் உட்பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பொதுமக்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பு பகுதி மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடத்தில் மதுபான கடை அமைப்பதால் ஏற்படக்கூடிய சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...